திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய்
நகார வகார நல் காலது நாடுமே.

பொருள்

குரலிசை
காணொளி