பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின், உறுதுணையாம் - ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவம் பூணும் பிரான்.
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப் பிரானிடபம் பேரொலிநா ணாகம்; - பிரானிடபம் பேணும் உமை;பெரிய புன்சடையின் மேலமர்ந்து பேணும் உமை, யிடவம் பெற்று.
பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே பெற்றும் பிறவி பிறந்தொழிமின்; - பெற்றும் குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக் குழையணிந்த கோளரவ நீ.
நீயேயா ளாவாயும் நின்மலற்கு; நன்னெஞ்சே, நீயேயா ளாவாயும் நீள்வாளின், - நீயேயேய் ஏறூர் புனற்சடையா, எங்கள் இடைமருதா, ஏறூர் புனற்சடையா என்று.
என்றும் மலர்தூவி, ஈசன் திருநாமம் என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் - என்றும் (மூன்றாம் அடி கிடைக்கில்லை) புகலூரா, புண்ணியனே என்.
என்னே, இவளுற்ற மால்!என்கொல்! இன்கொன்றை, என்னே, இவளொற்றி யூரென்னும்! - என்னே தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்! தவளப் பொடியானைச் சார்ந்து.
சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவா,மூ வாப்பெருமை சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த ஆதியே! அம்பலவா! அண்டத்தை ஆட்கொள்ளும் ஆதிஏன்(று) என்பால் அருள்.
அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய் அருள்சேரா(து) ஆரூர்தீ யாடி -அருள்சேரப் பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற்கால்நிமிர்த்துப் பிச்சையேற்று உண்டுழல்வாய்பேச்சு.
பேச்சுப்பெருக்குவதென்பெண் ஆண் அலியென்று பேச்சுக் கடந்தபெருவெளியைப் - பேச்சுக்(கு) உரையானை ஊனுக்குஉயிரானை ஒன்றற்(கு) உரியானை நன்னெஞ்சேஉற்று.
உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன் உற்றுரையா வண்ணம்ஒன் றானா னை - உற்றுரையா ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும் ஆனையுரித் தானை அடைந்து.
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து) அடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்(கு) - அடைந்துன்பால் அவ்வமுதம் ஊட்டி, அணிமலருஞ் சூழ்ந்தன்று அவ்வமுத மாக்கினாய் காண்.
காணாய், கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக் காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் - காணா உடைதலைகொண்(டு) ஊரூர் திரிவானை நச்சி உடைதலைகொண்(டு) ஊரூர் திரி.
திரியும் புரம்எரித்த சேவகனார், செவ்வே திரியும் புரம்எரியச் செய்தார், - திரியும் அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி அரிஆன்(று) இருக்கயிலை யாம்.
(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை) ஆம்பரிசே செய்தங் கழியாக்கை - ஆம்பரிசே ஏத்தித் திரிந்தானை, எம்மானை, அம்மானை ஏத்தித் திரிந்தானை ஏத்து.
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல் ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப் பாசுபதம் அன்றளித்த பாசூரான், பால்நீற்றான் பாசுபதம் இன்றளியன் பால்.
பாலார் புனல்பாய் சடையானுக்(கு) அன்பாகிப் பாலார் புனல்பாய் சடையானாள், - பாலாடி ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனி,தீ ஆடுவான் என்(று)என்றே ஆங்கு.
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம், அஃதன்றே ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற அம்பரத்தும், அண்டத்தும் ஆம்!
மாயனைஓர் பாகம் அமர்ந்தானை, வானவரும் மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை - மாய உருவானை மாலை ஒளியானை, வானின் உருவானை ஏத்தி உணர்.
உணரா வளைகழலா, உற்றுன்பாற் சங்கம்; உணரா வளைகழல ஒட்டி - உணரா அளைந்தான மேனி அணியாரூ ரேசென்(று) அளைந்தானை ஆமாறு கண்டு.
கண்டிறந்து, காயெரியின் வீழ்ந்து கடிதோடிக் கண்டிறந்து காமன் பொடியாகிக் - கண்டிறந்து கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான் கானின்உகந் தாடுங் கருத்து.
கருத்துடைய ஆதி, கறைமிடற்(று)எம் ஈசன் கருத்துடைய கங்காள வேடன்; - கருத்துடைய ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி, ஆமாத்தூர் ஆனேற்றான் ஏற்றான் எரி.
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி எரியாடி யேகம்ப மாகும் - எரியாடி ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப, ஈமத் திடுங்காடு தான்.
தானயன் மாலாகி நின்றான்; தனித்துலகில் தானயன் மாலாய தன்மையான் - தான்அக் கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக் கரைப்படுத்தான்; தன்பாதஞ் சார்.
சாராவார் தாமுளரேல், சங்கரன்; தன் மேனிமேல் சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாம் அரவமது செஞ்சடைமேல்; அக்கொன்றை ஒற்றி அரவமது செஞ்சடையின் மேல்.
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம் மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் - மேலாய மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும் அங்கை உமைவந்(து) அடுத்து.
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள் அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும் ஆனைக்கா வான்தன் அமைவு.
அமைவும் பிறப்பும் இறப்புமாம், மற்றுஉங்(கு) அமைவும் பரமான ஆதி - அமையும் திருவால வாய்சென்று சேராது, மாக்கள் திருவாலவாய்சென்று சேர்.
சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்இடந்(து)அன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்இடந்(து)அன்று அப்பாமைப் பார்த்து.
பார்த்துப் பரியாதே; பால்நீறு பூசாதே; பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே; - பார்த்திட்(டு) உடையானஞ் சோதாதே; ஊனாரைக் கைவிட்(டு) உடையானஞ் சோதாதார் ஊண்.
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின் ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள்; - ஊணென்றும் விட்டானே! வேள்வி துரந்தானே! வெள்ளநீர் விட்டானே புன்சடைமேல் வேறு!
வேறுரைப்பன் கேட்டருளும்; வேதம்நான் காறங்கம் வேறுரைத்த மேனி விரிசடையாய்! - வேறுரைத்த பாதத்தாய்! பைங்கண் அரவூர்வாய் பாரூரும் பாதத்தாய்என்னும் மலர்.
மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத மலர்அணைந்து மால்நயன மாகும் - மலர்அணைந்து மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால் வன்சக்கர் அம்பரனே வாய்த்தது.
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால் வாய்த்த அடிமுடி யுங்காணார்; - வாய்த்த சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ! சலந்தரனாய் நின்றவா தாம்
தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில் தாம்என்னை வேறாத் தனித்திருந்து - தாமென் கழிப்பாலை சேருங் கறைமிடற்றார்; என்னோ கழிப்பாலை சேருங் கடன்.
கடனாகக் கைதொழுமின்; கைதொழவல் லீரேல், கடல்நாகைக் காரோணாம் மேயான் . கடநாகம் மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய் மாளவிரித் தாடுவான் வந்து.
வந்தார் வளைகழல்வார்; வாடித் துகில்சோர்வார்; வந்தார் முலைமெலிவார்; வார்குழல்கள் - வந்தார் சரிதருவார்பைங்கொன்றைத் தாராரைக் கண்டு சரிதருவார்பைங்கொன்றைத் தார்.
தாரான் எனினும் சடைமுடியான், சங்கரன்அம் தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே வாளுங் கொடுத்தான் மதித்து.
மதியாருஞ் செஞ்சடையான், வண்கொன்றைத் தாரான் மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும் அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி அண்ணா மலைசேர்வ ரால்.
ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம் ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ, - ஆலந் துறையுடையான் ஆனை உரியுடையான், சோற்றுத் துறையுடையான் சோராத சொல்லு.
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண் சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய வீரட்டத் தானை, விரவார் புரம்அட்ட வீரட்டத் தானை விரை.
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு, - விரையாரும் நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார் நஞ்சுண்ட வாதி நலம்.
நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல் நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய் தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்.... தார்த்தார்க்கும் அண்ணா மலை.
மலையார் கலையோட, வார்ஓடக் கொங்கை மலையார் கலைபோய்மால் ஆனாள்; -மலையார் கலையுடையான் வானின் மதியுடையான், காவாத் தலையுடையான் என்றுதொழு தாள்.
தாளார் கமல மலரோடு, தண்மலரும் தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து - தாளார் சிராமலையாய்! சேமத் துணையேஎன்(று) ஏத்தும் சிராமலையார் சேமத் துளார்.
ஆர்துணையா ஆங்கிருப்ப(து)? அம்பலவா! அஞ்சொலுமை ஆர்துணையா ஆனை உரிமூடின் - ஆர்துணையாம் பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்! பூவணத்தாய் என்னின், புகல்.
புகலூர் உடையாய்! பொறியரவம் பூணி! புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்! வெண்காடா! வேலை விட முண்டாய்! வெள்ளேற்றாய்! வெண்காடா என்பேனோ, நான்.
நானுடைய மாடே! என் ஞானச் சுடர்விளக்கே! நானுடைய குன்றமே! நான்மறையாய்! - நானுடைய காடுடையாய்; காலங்கள் ஆனார் கனலாடும் காடுடையாய்! காலமா னாய்!
ஆயன் றமரர் அழியா வகைசெய்தான், ஆயன் றமரர் அழியாமை - ஆயன் திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி திருத்தினான் சேதுக் கரை.
கரையேனும் மாதர் கருவான சேரும் கரையேனும் ஆது கரையாம்; - கரையேனும்; கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல் கோளிலியெம் மாதி குறி.
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக் குறியாகி நின்ற குணமே - குறியாகும் ஆலங்கா டெய்தா அடைவேன்;மேல் ஆடவரம் ஆலங்கா டெய்தா அடை.
அடையும் படைமழுவும், சூலமும் அங்கி அடையும் பிறப்பறுப்ப தானால் - அடைய மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார், மறைக்காடு சேர்மக்கள் தாம்.
தாமேய ஆறு சமய முதற்பரமும் தாமேய ஆறு தழைக்கின்றார்; - தாமேல், தழலுருவர், சங்கரவர், பொங்கரவம் பூண்ட தழலுருவர் சங்கரர்என்பார்.
பார்மேவு கின்ற பலருருவர்; பண்டரங்கர்; பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல் வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார் வலஞ்சுழியைச் சேரவரு வார்.
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா, வாரணிந்த கொன்றை மலர்சூடீ, - வாரணிந்த செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா, சேயொளியாய் செஞ்சடையாய், செல்ல நினை.
நினைமால் கொண்டோடி, நெறியான தேடி நினைமாலே, நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு) ஊர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்(று) ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.
ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும் ஊர்வதுவும்மேல்லுரகம் ஊடுவர்கொல் - ஊர்வதுவும் ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க் கேகம்ப மாய்நின்ற ஏறு.
ஏறேய வாழ்முதலே, ஏகம்பா, எம்பெருமான், ஏறேறி யூரும் எரியாடி, - ஏறேய ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே, ஆதிவிடங் கா;உமைதன் மாட்டு.
மாட்டும் பொருளை, உருவு வருகாலம் வாட்டும் பொருளை, மறையானை, - மாட்டும் உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம் உருவானைச் சோதி; உரை.
உரையா இருப்பதுவும் உன்னையே; ஊனில் உரையாய், உயிராய்ப் பொலிந்தாய், - உரையாய அம்பொனே சோதி; அணியாரூர் சேர்கின்ற அம்பொனே சோதியே, ஆய்ந்து.
ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும் என்மேல் ஆய்ந்தென்றன் பாச மலமறுத் - தாய்ந்துன்றன் பாலணையச் செய்த பரமா, பரமேட்டி, பாலணையச் செய்த பரம்.
பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட பரமாய பைங்கண் சிரமே! - பரமாய ஆறடைந்த செஞ்சடையாய்! ஐந்தடைந்த மேனியாய்! ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.
அன்பே உடைய அரனே, அணையாத அன்பே உடைய அனலாடி, - அன்பே கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே கழுமலத்து ளாடுங் கரி.
கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே கரியார்தாஞ் சேருங் கவாலி, - கரியாகி நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம் நின்ற கழிப்பாலை சேர்.
சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல் சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும்; மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான், மலையான் மகளை மகிழ்ந்து.
மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர் மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம் ஒன்றாகி நின்ற உமைபங்கர், ஒற்றியூர் ஒன்றாகி நின்ற உமை.
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும், உமைகங்கை என்றிருவர் காணார்; - உமைகங்கை கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று கார்மிடற்றம் மேனிக் கினி.
இனியவா காணீர்கள்; இப்பிறவி எல்லாம் இனியவா ஆகாமை யற்றும் - இனியவா(று) ஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை, ஆக்கை பலசெய்த அன்று.
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி, அன்றவுணர் வீட அருள்செய் தான்; - அன்றவுணர் சேராமல் நின்ற அடிகள், அடியார்க்குச் சேராமல் நின்ற சிவம்.
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும் சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம்; - சிவனந்தம் சேரும் உருவுடை யீர் செங்காட் டங்குடிமேல் சேரும், உருவுடையீர், செல்.
செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின் செல்லும் அளவும் சிவன்உம்மைச் - செல்லும் திருமீச்சூர்க்(கு) ஏறவே செங்கண்ஏ றூரும் திருமீச்சூர் ஈசன் திறம்.
திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்! திறமென்னும் சிந்தைக்கும் ஆமே? - திறமென்னும் சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற சித்தத்தீரே! செல்லும் நீர்.
நீரே, எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே நெடுவானில் நின்றீரும் - நீரேய் நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர் நெருப்பாய தோற்றம் நிலைத்து.
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்; நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக் கானப்பே ரீங்கங்கை சூடினீர்; கங்காளீர்; கானப்பே ரீர்கங்கை யீர்.
ஈரம் உடைய இளமதியம் சூடினீர்; ஈரம் உடைய சடையினீர்; - ஈர வருங்காலம் ஆயினீர்; இவ்வுலகம் எல்லாம் வருங்காலம் ஆயினீர்; வாழ்வு.
வாழ்வார் மலரணைவார், வந்த அருநாகம் வாழ்வார் மலரணைவார்; வண்கங்கை - வாழ்வாய தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார் தீயாட வானாளு மாறு.
மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல் மாறாத நீருடைய மாகாளர், - மாறா இடுங்கையர் சேரும் எழில்வாய், முன்னே இடுங்கையர் சேர்வாக, ஈ.
ஈயும் பொருளே; எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே! இடுகாட்டின் - ஈயும் படநாகம் பூணும் பரலோகீர்! என்னீர் படநாகம் பூணும் படி.
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி; படியேறு பார்த்துப் பரன்இப் - படிஏனைப் பாருடையாய்! பைங்கண் புலியதளாய்! பால்நீற்றாய்! பாருடையாய்! யானுன் பரம்.
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன் பரமாய ஆதிப் பரனே - பரமாய நீதியே நின்மலனே! நேரார் புரம்மூன்றும் நீதியே செய்தாய்; நினை
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம் நினையடைந்தேன் சித்த நிமலா! - நினையடைந்தேன்; கண்டத்தாய்! காளத்தி யானே கனலாரும் கண்டத்தாய்! காவாலி! கா.
காவார் பொழிற்கயிலை ஆதி! கருவேஎம் காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய ஏறுடையாய்! என்னை இடைமருதிலேஎன்றும் ஏறுடையாய்! நீயே கரி.
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண! கரியாருங் கூற்றங் கனியே - கனியாரும் காடுடையாய்! காலங்கள் ஆனாய் கனலாடும் காடுடையாய்! காலமா னாய்.
ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன் ஆனாய னாவமுத மேயானாய் - ஆனாய் கவர்எலும்போ(டு) ஏந்தி கதநாகம் பூணி கவலெலும்பு தா;கை வளை.
வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே; வளைகொண்டாய்; மாசற்ற சோதி - வளைகொண்டாய் மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற மாற்றார் ஊர்கின்ற மயல்.
மயலான தீரும் மருந்தாகும்; மற்றும் மயலானார் ஆரூர் மயரார் - மயலான கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக் கண்ணியன்றன் பாதமே கல்.
கலைமான்கை, ஏனப்பூண் காண்கயிலை மானின், கலைமான் கறைகாண் கவாலி, - கலைமான ஆடுவதும், பாடுவதும், காலனைப்பொன் அம்பலத்துள் ஆடுவதும் ஆடான் அரன்.
அரனே! அணியாரூர் மூலட்டத் தானே! அரனே! அடைந்தார்தம் பாவம் - அரனே! அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்; அயனாக மாக அடை.
அடையுந் திசைஈசன் திண்டோளா காசம் அடையுந் திருமேனி; அண்டம் - அடையும் திருமுடிகால் பாதாளம்; ஆடைகடல் அங்கி திருமுடிநீர்; கண்கள்சுடர் மூன்று.
மூன்றரணம் எய்தானே! மூலத் தனிச்சுடரே மூன்றரண மாய்நின்ற முக்கணனே! - மூன்றரண மாய்நின்ற சோதி! அணியாரூர் சேர்கின்ற ஆய்நின்ற சோதி! அறம்.
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர அறமானார் அங்கம் அணிவர்; - அறமாய வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன; வல்வினைகள் வாராத வாறு.
ஆறுடையர்; நஞ்சுடையர்; ஆடும் அரவுடையர்; ஆறுடையர் காலம் அமைவுடையர்; - ஆறுடைய சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
சேர்வும் உடையா செழுங்கொன்றைத் தாரார்;நஞ் சேர்வும் உடையர்; உரவுடையர் - சேரும் திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க, என்றும் திருச்சாய்க்காட் டேநின் உருவு.
உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்; உருவு பலவாம் ஒருவர்; - உருவு பலவல்ல; ஒன்றல்ல; பைஞ்ஞீலி மேயார் பலவல்ல; ஒன்றா ப் பகர்.
பகரப் பரியானை மேல்ஊரா தானைப் பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப் பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம் பரியானைச் சேருலகம் பண்.
பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும் பண்ணாகச் செய்த பரமேட்டி! - பண்ணா எருத்தேறி ஊர்வாய்; எழில்வஞ்சி எங்கள் எருத்தேறி ஊர்வாய்; இடம்.
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார் இடமானார்க்(கு) ஈந்த இறைவர், - இடமாய ஈங்கோய் மலையார், எழிலார் சிராமலையார், ஈங்கோய் மலையார் எமை.
எமையாள வந்தார் இடரான தீர, எமையாளும் எம்மை இமையோர், - எமையாளும் வீதிவிடங் கர்,விடம துண்டகண் டர்,விடையூர் வீதிவிடங் கர்,விடையூர் தீ.
தீயான மேனியனே! செம்பவளக் குன்றமே! தீயான சேராமற் செய்வானே! - தீயான செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச் செம்பொற் சிவலோகஞ் சேர்.
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே! சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்; ஒற்றியூ ரானே! உறவாரும் இல்லை,இனி ஒற்றியூ ரானே உறும்.
உறுமுந்த முன்னே உடையாமல், இன்னம் உறுமுந்த முன்னே யுடையா - உறுமும்தம் ஒரைந்(து) உரைத்துஉற்று உணர்வோ(டு) இருந்தொன்றை ஒரைந் துரைக்கவல்லார்க் கொன்று. தனி வெண்பா ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல; ஒன்றைப் பகரில் ஒருகோடி; ஒன்றைத் தவிராது உரைப்பார் தளரா; உலகில் தவிரார் சிவலோகந் தான்.