பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து) ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும் மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த மதியான் இடப்பக்கம் மால்.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை மாலை ஒருபால் முடியானை, - மாலை ஒளியானை, உத்தமனை, உண்ணாநஞ் சுண்டற்(கு) ஒளியானை, ஏத்தி உளம்.
உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும் உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று) அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும் அங்கமல வண்ணன் அடி.
அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம் அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி, அந்தரத்தார் சூடும் அலர்.
அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு) அலராகி யானும் அணிவன்; - அலராகி ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர் ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே ஊரும் விடையொன்(று) உடைதோலே, - ஊரும் படநாகம் மட்டார் பணமாலை ஈதோ படநாகம் அட்டார் பரிசு.
பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும் பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக் கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும் கண்டங் கரியன்; கரிகாடன்; - கண்டங்கள் பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு), என்னுள்ளம் படியாக் கொண்ட பதி.
பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென் பதியான் பலநாள் இரக்கப் - பதியாய அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல், அம்மானார் கையார் அறம்!
அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு) அறமாநஞ் கண்ட அமுதன் - அறல்மானும் ஓதியான் பாகம் அமர்ந்தான் உயர்புகழே ஓதியான் தோற்றேன் ஒளி.
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு) ஒளியான் உலகெல்லாம் ஏத்த - ஒளியாய கள்ளேற்றான், கொன்றையான் காப்பிகந்தான், நன்னெஞ்சே கள்ளேற்றான் கொன்றை கடிது.
கடியரவர், அக்கர், இனிதாடு கோயில் கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவ ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே, அஞ்சல்நீ ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி, ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.
யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு) ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை ஆர்த்தானேல், உய்வ தரிது.
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான் அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும் வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் வேங்கடத்து நோயால் வியந்து.
வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய் வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக் கண்ணுதலாம் நம்பாற் கடன்.
கடனாகம் ஊராத காரணமும், கங்கை கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப் பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி, பாரிடந்தான் மேயாய், பணி.
பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்; பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய ஆகத்தான் செய்துமேல், நம்மை அமரர்கோன் ஆகத்தான் செய்யும் அரன்.
அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும் அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம் அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ? நெஞ்சே, அயன்.
அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை அயமாவ(து) ஆனே(றுஆ)ர் ஆரூர் - அயமாய என்னக்கன், தாழ்சடையன், நீற்றன் எரியாடி என்னக்கன் றாழும் இவள்.
ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று) ஆழும் இவளை அயராதே - ஆழும் சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய், சலமுடியா தின்றருள்வாய் தார்.
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல் லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல் லானையும் வானோர்க் கரசு.
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான் அரசுமாம் அங்கொன்றும் மாலுக்(கு) - அரசுமான் ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன், ஊர்தி எரித்தான் உறா.
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து) உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க் காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள் காவாலி தாம்நின் கலை.
கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்! கலைசேர் நுதலிர்நாண் காமின்! - கலையாய பால்மதியன், பண்டரங்கன், பாரோம்பு நான்மறையன் பால்மதியன் போந்தான் பலிக்கு.
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப் பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல் ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த் தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும் தீங்குழலும் என்னையே தேர்ந்து.
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த் தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே கூடற்கா வாலி குரைகழற்கா, நன்னெஞ்சே கூடற்கா வாலிதரக் கூர்.
கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக் கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார் பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே, பனிச்சங்காட் டாய்,கடிக்கப் பாய்ந்து.
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலன்நற் கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே கொன்றாய்; இதுவோ குணம்!
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித் தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரிரவில் வாழும் திறம்.
திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந் தீவண்ணன்; என்னும் - திறங்காட்டின் ஊரரவம் ஆர்த்தானோ(டு) என்னை யுடன்கூட்டின் ஊரரவஞ் சால உடைத்து.
உடைஓடு காடாடி, ஊர்ஐயம் உண்ணி, உடைஆடை தோல்,பொடிசந்(து) என்னை - உடையானை உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே, உன்மத் தகமுடிமேல் உய்.
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும் உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை; - உய்யாம் இறையானே! ஈசனே! எம்மானே! நின்னை இறையானும் காண்கிடாய்; இன்று.
இன்றியாம் உற்ற இடரும், இருந்துயரும் இன்றியாம் தீர்தும், எழில்நெஞ்சே - இன்றியாம் காட்டாநஞ் சேற்றான், காமரு வெண்காட்டான் காட்டானஞ் சேற்றான் கலந்து.
கலம்பெரியார்க் காஞ்சிரம்,காய் வின்மேரு என்னும், கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை; - கலம்பிரியா மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ மாக்கடனஞ் சேரும் வகை.
கையா(று), அவா,வெகுளி, அச்சங், கழிகாமம் கையாறு செஞ்சடையன் காப்பென்னும்; - கையாறு மற்றிரண்ட தோளானைச் சேர்,நெஞ்சே, சேரப்போய் மற்றிரண்ட தோளான் மனை.
மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனைஆ சறச்செற்ற வானோன்; - மனைஆய என்பாவாய் என்றேனுக்(கு), யானல்லேன், நீதிருவே என்பாவாய் என்றான் இறை.
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறைஆகம் இன்றருளாய் என்னும்; - இறையாய்! மறைக்காட்டாய்! மாதவனே! நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி, வளர்சடைமேல் மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து, - மாதரங்கத் தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரானை யூரானைத் தேர்.
தெருளிலார் என்னாவார்! காவிரிவந் தேறும் அருகில் சிராமலையெங் கோமான். - விரியுலகில் செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின் செல்லுமெழில் நெஞ்சே, தெளி.
தெளியாய் மடநெஞ்சே, செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் - தெளியாய பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற் பூவாய வாசம் புனைந்து.
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான், புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம் நட்டங்க மாட்டினேன், நக்கு.
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர் நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையோம் வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான், மற்றவர்க்காய் வண்டாழங் கொண்டாள் மதி.
மதியால் அடுகின்ற தென்னும்;மால் கூரும், மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா, ஈதேகொல்! மாதெய்வங் கொண்ட வனப்பு.
வனப்பார் நிறமும், வரிவளையும், நாணும் வனபார் வளர்சடையான் கொள்ள, - வனப்பால் கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட் கடற்றிரையும் ஈருங் கனன்று.
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் கனன்றார் களிற்றுரிமால் காட்டக், - கனன்றார் உடம்பட்ட நாட்டத்தன், என்னையுந்தன் ஆளா உடம்பட்ட நாட்டன் உரு.
உருவியலுஞ் செம்பவளம்; ஒன்னார் உடம்பில் உருவியலுஞ் சூலம் உடையன், - உருவியலும் மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய் மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு!
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்போல் முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார் முற்கூட மாட்டா முலை.
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும் முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும்; - முலைநலஞ்சேர் மாதேவா, என்று வளர்கொன்றை, வாய்சோர, மாதேவா, சோரல் வளை.
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் வளையாழி நன்னெஞ்சே, காணில், - வளையாழி வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த வன்னஞ்சக் கண்டன் வரில்.
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர் இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான் இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
அக்காரம்; ஆடரவம் நாண்;அறுவை தோல்;பொடிசாந்(து) அக்காரந் தீர்ந்தேன்; அடியேனுக்(கு) - அக்காரம் பண்டரங்கன், எந்தை, படுபிணஞ்சேர் வெங்காட்டுப் பண்டரங்கன், எங்கள் பவன்.
பவனடிபார்; விண்,நீர், பகலோன், மதி,தீப், பவனஞ்சேர் ஆரமுதம்; பெண்ஆண்; - பவனஞ்சேர் காலங்கள் ஊழி அவனே; கரிகாட்டில் காலங்கை எந்தினான் காண்.
காணங்கை இன்மை கருதித் கவலாதே காணங்கை யாற்றொழுது; நன்னெஞ்சே, - காணங்கை பாவனையாய் நின்றான், பயிலும் பரஞ்சோதி பாவனையாய் நின்ற பதம்.
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான், பண்டு பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால் அஞ்சலிகள் அன்பாலும், ஆக்குதிகாண், நெஞ்சே,கூர்ந்(து) அஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.
ஆககூர் பனிவாடா, ஆவிசோர்ந் தாழ்கின்றேன்; ஆக்கூர் அலர்தான் அழகிதா? - ஆக்கூர் மறையோம்பு மாடத்து மாமறையோன், நான்கு மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
வந்தியான் சீறினும் வாழி! மடநெஞ்சே! வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய், நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை, நம்பரனை நாள்தோறும் நட்டு.
நட்டமா கின்றன வொண்சங்கம்; நானவன்பால் நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா டீயான் எரியாடி, எம்மான் இருங்கொன்றை ஈயானேல் உய்வ திலம்.
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே? இலமலரே ஆயினும் ஆக; - இலமலரும் ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன் ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.
ஆளானம் சேர்களிறும், தேரும், அடல்மாவும் ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே - ஆளான்பொய்; நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம் நாடகங்கள் ஆடி நயந்து.
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள் அம்பலகலஞ் செற்றான் அருளான்; அநங்கவேள் அம்பலகம் பாயும் அலர்ந்து.
அலங்காரம் ஆடரவம், என்பு;தோல் ஆடை; அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம் மெய்காட்டும் வார்குழலார் என்னாவார்! வெள்ளேற்றான் மெய்காட்டும் வீடாம் விரைந்து.
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா விரையார் பொழிலுறந்தை மேயான், - விரையாநீ(று) என்பணிந்தான் ஈசன் இறையான், எரியாடி என்பணிந்தான் ஈசன் எனக்கு.
எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான்? - இனக்குவளைக் கண்டத்தான், நால்வேதன், காரோணத் தெம்மானைக் கண்டத்தால், நெஞ்சே,காக் கை.
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்,குரக்குக் - காக்கைவளை ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன் ஆடானை யான(து) அமைவு.
அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங் கமையாநோய் செய்தான் அணங்கே, - எமையாளும் சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன், சாமத்தன் இந்நோய்செய் தான்.
தானக்கன், நக்க பிறையன், பிறைக்கோட்டுத் தானக் களிற்றுரியன், தண்பழனன் . தானத் தரையன், அரவரையன் ஆயிழைக்கும், மாற்கும் அரையன் உடையான் அருள்.
அருள்நம்பாற் செஞ்சடையன், ஆமாத்தூர் அம்மான், அருள்நம்பால் நல்கும் அமுதன், - அருள்நம்பால் ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை, ஓராழி நெஞ்சே, உவ.
உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று) எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க் கென்னே; எழுமதிபோல் ஈசன் இடம்
இடமால்; வலமாலை வண்ணமே; தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான், மூவா மதியான் முனி.
முனிவன்,மால் செஞ்சடையான், முக்கணான் என்னுமர் முனிவன்மால் செய்துமுன் நிற்கும்; - முனிவன்மால் போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள் போற்றாநாள் இன்று புலர்ந்து.
புலர்ந்தால்யான் ஆற்றேன்; புறனுரையும் அஃதே புலர்ந்தானூர் புன்கூரான் என்னும்; - புலர்ந்தாய மண்டளியன் அம்மான் அவர்தம அடியார்தம் மண்டளியன் பின்போம் மனம்.
மனமாய நோய்செய்தான்; வண்கொன்றை தாரான்; மனமாய உள்ளார வாரான்; - மனமாயப் பொன்மாலை சேரப் புனைந்தான்; புனைதருப்பைப் பொன்மாலை சேர்சடையான் போந்து.
போந்தார், புகவணைந்தார்; பொன்னேர்ந்தார்; பொன்னாமை போந்தார் ஒழியார் புரமெரித்தார்; - போந்தார் இலங்கோல வாள்முகத்(து) ஈசனார்க்(கு) எல்லே இலங்கோலந் தோற்ப தினி.
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல்! எண்ணார், இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான், - இனியானைத் தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய தாளங்கை யால்தொழுவார், தாம்.
தாமரைசேர் நான்முகற்கும், மாற்கும் அறிவரியார், தாமரைசேர் பாம்பர், சாடமகுடர், - தாமரைசேர் பாணியார், தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார் பாணியார், தீர்ந்தளிப்பர்; பார்.
பார்,கால்,வான், நீர்,தீப், பகலோன், பனிமதியன் பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக் கோகரணத் தானறியக் கூறுதியே! நன்னெஞ்சே கோகரணத் தானாய கோ.
கோப்பாடி ஒடாதே; நெஞ்சே மொழி; கூத்தன் கோப்பாடிக் கோகரணங், குற்றாலம்; - கோப்பாடிப் பின்னைக்காய் நின்றாற்(கு) கிடம்கொடுக்கும் பேரருளான் பின்னைக்காம், எம்பெருமான் பேர்.
பேரானை ஈருரிவை போர்த்தனை, ஆயிரத்தெண் பேரானை, ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு) உண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும் உண்டாம்நா ளல்ல உயிர்.
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி, உள்ளத் துயிராய ஒண்மலர்தாள் ஊடே - உயிரான் பகர்மனத்தான், பாசுபதன் பாதம் பணியப் பகர்மனமே, ஆசைக்கட் பட்டு.
பட்டாரண் பட்டரங்கன், அம்மான், பரஞ்சோதி, பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த கோவணத்தான், கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே, கோவணத்து நம்பனையே கூறு.
கூற்றும், பொருளும்போற் காட்டி,யெற் கோல்வளையைக் கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின் செருக்கழியச் செற்ற சிவற்கடிமை, நெஞ்சே, செருக்கழியா முன்னமே செய்.
செய்யான், கருமிடற்றான், செஞ்சடையான், தேன்பொழில்சூழ் செய்யான், பழனத்தான், மூவுலகும் - செய்யாமுன் நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய், நன்னெஞசே, நாட்டூணாய் நின்றானை நாம்.
நாவாய் அகத்துளதே; நாமுளமே; நம்மீசன் நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே; - நாவாயால் துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும்; மற்றவர்க்காள் துய்க்கப் படுவதாஞ் சூது.
சூதொன் றுனக்கனறியச் சொல்லினேன்; நன்னெஞ்சே சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின் கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக் கொழுந்தே இழந்தேன் குருகு.
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக் குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்; போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும் போதாநின் பொன்முடிக்கட் போது.
போதரங்க வார்குழலார் என்னாவார்? நன்னெஞ்சே போதரங்க நீர்கரந்த புண்ணியற்குப் - போதரங்கக் கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும் கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
கற்றானஞ் சாடுகா வாலி, களந்தைக்கோன், கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்; அமரர்க் கமரர் அரர்க்டிமை பூண்டார் அமரர்க் கமரரா வார்.
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும் ஆவார்போற் காட்டி, அழிகின்றார்; - ஆவா! பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப் பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
பகனாட்டம் பாட்டயரும், பாட்டோடாட் டெல்லி பகனாட்டம் பாழ்படுக்கும்; உச்சி - பகனாட்டந்(து) ஆங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான், தம்முடைய(து) ஆங்கால் தொழுதல் தலை.
தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்; தலையாலங் காடர்தம் என்னும்; - தலையாய பாகீ ரதிவளரும் பல்சடையீர், வல்விடையீர், பாகீ ரதிவளரும் பண்பு.
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான், பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் - பண்பால் திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான் திருமாலு மங்கைச் சிவன்.
சிவன்மாட் டுகவெழுதும்; நாணும் நகுமென்னும்; சிவன்மேய செங்குன்றூர் என்னும்; - சிவன்மாட்டங்(கு) ஆலிங் கனம்நினையும் ஆயிழை,ஈர் அங்கொன்றை யாலிங் கனம்நினையு மாறு.,
ஆறாவெங் கூற்றுதைத்(து) ஆனைத்தோல் போர்த்துகத்தங்(கு) ஆறார் சடையீர் கமையாதே? - ஆறாத ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை; ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.
ஆட்டும் அரவம், அழிந்தார் எலும்பணிவார் ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர் போரேற்றான், கொன்றையான் போந்தான் பலிக்கென்று; போரேற்றான் போந்தான் புறம்.
புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே புறத்தாழ் புலிப்பொதுவுள் ஆடி, - புறந்தாழ்பொன் மேற்றளிக்கோன், வெண்பிறையான், வெண்சுடர்போல் மேனியான் மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
மெய்யன் பகலாத வேதியன், வெண்புரிநூல் மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் - வெய்ய துணையகலான், நோக்கலான், போற்றிகலா நெஞ்சே, துணையிகலா கூறுவான் நூறு.
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து, நூறா நொடிவதனின் மிக்கதே, - நூறா உடையான் பரித்தவெரி உத்தமனை, வெள்ளே றுடையானைப் பாடலால் ஒன்று.