பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக் கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத் தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்.