பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருகுறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
வ.எண் பாடல்
001

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை இல் கருணைத்
தாய் அனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ
ஆயும் நான்மறை போற்ற நின்று அருந்தவம் புரியத்
தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு.

002

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெருந்தொண்டை நல் நாடு.

003

நல் திறம் புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.

004

ஆணை ஆம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.

005

கறை விளங்கிய கண்டர் பால் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேரிழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை ஆம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்.

006

தாவில் செம்மணி அருவி ஆறு இழிவன-சாரல்
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ-புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன-மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.

007

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல்.

008

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்
தண் துணர்க் கொன்றை பொன் சொரி தளவு அயற்பால்
வண்டல் முத்தம் நீர் மண்டு கால் சொரிவன வயற்பால்
கண்டல் முன் துறைக் கரி சொரிவன கலம் கடற்பால்.

009

தேன் நிறைந்த செந்தினை இடி தரும் மலைச் சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்.

010

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அங்கழியன நெய்தல்.

011

மல்கும் அப் பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகை
சொல்லும் அப்புனம் காப்பவும் சுரி குழல் தோகை.

012

அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச்
செங்கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.

013

பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறு இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும்
கூறு மேன்மையின் மிக்கது அந் நாட்டு வண் குறிஞ்சி.

014

அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்
வம்பு உலாம் மலர்ச் சுனை படிந்து ஆடும் நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ.

015

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள்
நீல வாள் படை நீலி கோட்டங்களும் நிரந்து
கால வேனிலில் கடும் பகல் பொழுதினைப் பற்றிப்
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு.

016

சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கான் ஆறு இடை இடை பரந்து
கொல்லை மெல் இணர்க் குருந்தின் மேல் படர்ந்த பூம்பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து அடங்கு நீள் முல்லை.

017

பிளவு கொண்ட தன் மதி நுதல் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவு எனக் களவு அலர் தூற்றும்
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று.

018

மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்று அவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்.

019

நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல்
மாறு இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை.

020

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிப்
பாசடைத் தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.

021

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி.

022

பிள்ளை தை வரப் பெருகு பால் சொரி முலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.

023

அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரைப் பெரும் குளங்கள்
புனை இருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம் போய்
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால்.

024

மாறு இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடைப் பெரும் கம்பலை மிகும் ஆல்.

025

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச்
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி.

026

தளைத் தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பு இடை ஊர் கோள்
வளைத்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு.

027

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கருப்பு
பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூகப்
பாங்கு நீள் குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனிச் சூதம் நீள் வேலிய சோலை.

028

நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகன மல்லல் மூது ஊர்கள்.

029

தொல்லை நான்மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்.

030

தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு
நாதர் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய்
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.

031

அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருமி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையில்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்தது அப் பூம்பணை மருதம்.

032

விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள்
அரும் கரைப் பயில் சிவ ஆலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்.

033

பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணைப் புறத்தது கரும் கழி நெய்தல்.

034

தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அளத்து அளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.

035

கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி.

036

சுழிப் புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதிப் பொன் அவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கும் நெய்தலின் விரை மலர்க் கண் சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை.

037

காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முள்
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன் துறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது.

038

வாம் பெருந்திரைவளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக்
காம்பின் நேர் வரும் தோளியர் கழிக் கயல் விலை செய்
தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய-செவ்வழி யாழ்.

039

மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திருப் பரப்பையும் உடையது அத் திரைக் கடல் வரைப்பு.

040

மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப்
பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அந் நிறை தவம் சிறிதோ?

041

கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரைச் சந்தனச் சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பல ஆல்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய.

042

மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத்
தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான்
கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவும் ஆய்
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம்.

043

புணர்ந்த ஆன் நிரை புறப் விடைக் குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.

044

கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துச்
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவளம் முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம்.

045

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு.

046

மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோள் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள்.

047

ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித்
தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத்
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ.

048

இவ் வளம் தரு பெருந்திரு நட்டு இடை என்றும்
மெய் வளம் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ் உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம்.

049

ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனம் இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த
மேன்மை பூண்ட அப் பெருமை அறிந்தவா விளம்பில்.

050

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித்
துள்ளு வார் புனல் வேணியார் அருள் செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ஆள் உடையாள்.

051

எண் இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து.

052

நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சிப் போகம் ஆர்த்த பூண் முலையினாள்

053

தேவ தேவனும் அது திரு உள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்.

054

ஏதம் இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த
பேதமும் புரந்து அருளும் அக் கருணைப் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தா

055

துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள்

056

அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவுஇல் இன்பத்தின் அருட் கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன் மலை வல்

057

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்சு எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம்மலர்க் கை குவித்து அருளித்
தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெருங்கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை மகள் காண.

058

கண்ட போதில் அப் பெருந்தவப் பயன் ஆம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பு அளவு இன்றிக் குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு
தொண்டை அங்கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புர

059

உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திருச் சேடியர் ஆன
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி அம்பி காவனம் ஆம் திரு வனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்

060

கொய்த பன்மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச்சு
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூசை
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி.

061

கரம்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி மாறு இலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் திரு உளம் கொளப் பெருகியது அன்றே.

062

நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்க ஓர் திரு விளையாட்டில் கனம் குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல் வரக் கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்.

063

அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அங்கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்து உறும் என வெருக் கொண்டே
உள் நிலாவிய பதைப்பு உறு காதலுடன் திருக் கையால் தடுத்தும் நில்லாமை
தண் நிலா மலர் வேணியினாரைத் தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்

064

மலைக் குலக் கொடி பரிவு உறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக் குவட்டொடு வளைக் கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும் செம் தளிர்க் கரங்களுக்கும் மெத் தனெவே
கொலைக் களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந

065

கம்பர் காதலி தழுவ மெய் குழையக் கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்பு உலா மலர் நிறைய விண் பொழியக் கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே.

066

பூதி ஆகிய புனித நீறு ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அவ் வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்

067

கோது இலா அமுது அனையவள் முலைகூக் குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர்ச் செய்ய தாமரைக் கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி.

068

அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிடக் கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம் நோக்கி அம் மலர்க் கண் நெற்றியின் மேல் முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவதில்லை நம் பால் என

069

மாறு இலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறு இலாத இப்பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப் பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒ

070

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு மேவி வீற்று இருந்தே
இடை அறா அறம் வளர்க்கும் வித்து ஆக இக பரத்து இரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்கு ஆம் தவங்களாகவும் உவந்து அருள் செய்

071

எண்ணரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணிய திருக் காம கோட்டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம்

072

அலகு இல் நீள் தவத்து அறப் பெரும் செல்வி அண்டம் ஆம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம்
மலர் பெருந்திருக் காமக் கோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே

073

தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்
பாங்கு மூன்று உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தம் ஆம் பைம் புனல் கேணி
வாங்கு தெண் திரை வேல்கை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று

074

அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொளாது அதன் மருங்கு போதலின் ஆல்
சந்த மாதிரம் மயங்கி எம் மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கம்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அ

075

கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பு இல் காஞ்சி ஆம் திரு நதிக் கரை மருங்கு
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும்
தன் நிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் மே

076

மறைகளால் துதித்து அருந்தவம் புரிந்து மாறு இலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவர் அவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண் இறந்த அத் திரு நகர் எல்லை.

077

மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மை யினாலே
துன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்
தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி
எந் நிலைத்தினும் காண்பரும் இறவாத் தானம் என்று இவை

078

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நல் மங்கள தீர்த்தம்
நீண்ட காப்பு உடைத் தீர்த்தம் மூன்று உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல்

079

தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்த செங்குவளை பைங் கமலம் நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயாப் புளி உளதால்.

080

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சு ஆம் தடம் ஒன்று
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அவ் உரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்.

081

அஞ்சு வன் கரத்து ஆறு இழி மதத்து ஓர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்று அரையின் நாமம் மூன்று இலைப் படை உடைப் பிள்ளை br>எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்

082

சத்தி தற் பரசித்தஅ யோகிகளும் சாதகத் தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள் நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தீ
வித்தகக் கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது

083

வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தம் இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்?

084

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய்ந் நெறிக் கண் நின்றார்கள் தாம் விரும்பித்
தீண்டில் யாவையும் செம் பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால் br>ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும்

085

என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன்
வன் திறல் புலி இமயமால் வரை மேல் வைக்க ஏகுவோன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யத் திருந்து காதம் நான்கு உட்பட வகுத்துக்
குன்று போலும் மா மதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கைய

086

தண் காஞ்சி மென் சினைப் பூங்கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப் பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மை

087

கொந்தலர் பூங்குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும் பூசனைக் குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்
அந்தம் இல் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடைகளங்கம் அறுப்பு அரிது என்று அறிந்து சூழ
வந்து அணைந்து தன

088

ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந் நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாம் குலவ நிலவி வளர் ஒளி

089

மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக் கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதால் என்ன விளங்கிய மா லோக நிலை மே

090

பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின் சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ண
மேகம் இடை கிழித்து ஒழுகும் தயெ

091

கிளர் ஒளிச் செங்கனக மயம் தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீலச் சோபனம் பூணக்
கொள அமைத்து மீது ஒருபால் கன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவு இல் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து ஏனம் ஆனான் உம் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு

092

மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்
வன் புலியின் உரி ஆடைத் திரு ஏகம்பர் வளர்சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய

093

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகர் இல் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமயப் பாவை
நகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்
அகில யோனிகள் எல்ல

094

பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூங்கழங்கும் மணிப் பந்தும் போற்றி ஆடும்
வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணிமணிச் சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நல் கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை

095

பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாடத்து துரமியங்கள் பொலிய நின்று
மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்
தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகி

096

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர் தங்களையும் விசும்பு இடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும்

097

அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும்
குரவு அலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்

098

வெம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர்க் கால் இசைப்பும் விழவு அறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்
பம

099

அருமறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்
பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்து விடு மந்திரம் எம் மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெரு

100

அரசர் குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மதக் கரிகெளாடு புரவி ஏறும் பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்பு உறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்த

101

வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணிக் கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்
பயிலும் உருப் பல கொண்டு நிதிக் கோன

102

விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமைப் பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம் பொன் மலைவல்லிக்கு அளித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப் பெற்றுத் தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால்

103

ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எ

104

ஆதி மூது எயில் அந் நகர் மன்னிய
சோதி நீள் மணித் தூபமும் தீபமும்
கோது இல் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா அணி

105

வாயில் எங்கணும் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக் குழாம்.

106

வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன.

107

சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன.

108

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண் நறும் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண் இல் குங்குமச் சேறே இழுக்கின.

109

வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது.

110

புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பு இல் போக வனப்பின் வளம் எல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தாதல்.

111

அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார்
இவ் உலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளார்
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டர் அடி வழித் தொண்டர் உளர் ஆனார்

112

மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சே வடியின் சார்வு ஆக அணைவிப்பார்
புண்ணிய மெய்த் தொண்டர் திருக் குறிப்பு அறிந்து போற்று நிலைத்
திண்மையினால் திருக் குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார்.

113

தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார்
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும்.

114

தேசு உடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம்
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசு உடைய மலம் மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள்.

115

பொன் இமயப் பொருப்பு அரையன் பயந்து அருளும் பூங்கொடி தன்
நல் நிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்
தன் உடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம் உடைய
அந் நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவான்.

116

சீதம் மலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையும்
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி.

117

திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்
கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளி
வரும்மேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர்ப் புளகம் உள ஆகப் பணிந்து எழுந்தார்.

118

எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்.

119

இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெய்க் கொண்ட குளிர்க்கு உடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால்
அக் குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீர் ஏல்
கைக் கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது என்றார்.

120

தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்.

121

குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்து
வெறித் தடநீர்த் துறையின் கண் மாசு எறிந்து மிகப் புழுக்கிப்
பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும் பகல் போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திடும் ஆல்.

122

திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்.

123

ஓவாதே பொழியும் மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக்
காவாலி திருத் தொண்டர் தனி நின்றார் விடக் காணார்
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால்
ஆ ஆ என் குற்றேவல் அழிந்த வா என விழுந்தார்.

124

விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக் காற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தன் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்.

125

கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவன் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தன் தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை.

126

வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழை ஆயிட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார்.

127

முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்.

128

சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப்
பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய்த் தொண்டர் பித்தன் எனப் பிதற்றுதலால்
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்.