திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சத்தி தற் பரசித்தஅ யோகிகளும் சாதகத் தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள் நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தீ
வித்தகக் கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது