திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தம் இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்?