திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே

பொருள்

குரலிசை
காணொளி