திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட
இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு
மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று