திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்
மாறு இலாய்! நிற்க என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி