திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட, நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப் பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.

பொருள்

குரலிசை
காணொளி