திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப் பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கின