திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவு உற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புஉறு குணம் முன் பெறவரு நிலை கூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடும் கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.