திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்புஅரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்.