திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்பு உற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்பு உற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.