திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவைக் கண்டு
உருகிப் பரிவுஉறு புனல் கண் பொழிவன என முன்புஉள வயல் எங்கும்.