திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளானார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்.