திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவு அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலம் ஆர் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுது உள்புக்கார்.