திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நான் மறைநூல் பெறுவாய்மை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மைப்
பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் திகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்.