திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்ப அரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார்.