திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழத்திடையே சென்று
பழுது இல் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்துஅவர்தம் கரங்கள் பற்றி
எழுத அரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார் தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்.