திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளி பாடிக்
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விகுடி எதிர் கொள் பாடி
பாஉறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி