திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண நீசர் புறத் துறை ஆம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழு