திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரீர்! நீரே அல்லால்
ஆர் என் துயரம் அறிவார்? அடிகேள்! அடியேன் அயரும் படியோ? இதுதான்;
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண்தலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்?