திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அந் நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவிப்
பொன் மணி மன்று உள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால்
என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்.