திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும் மேவார்; விழித்தும் இனிது அமரார்
பொன் பூந் தவிசின் மிசை இன் இரார்; நில்லார்; செல்லார்; புறம் பொழியார்;
மன் பூ வாளி மழை கழியார்; மறவார்; நினையார்; வாய் விள்ளார்;
என்பு ஊடு உருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்.