பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித் தட மலரால் களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள; இலஞ்சி பல.