திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அங்குஅம் மா நிலத்து எட்டு உற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்
பொங்கு காதலின் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்
துங்க நீள் பெருந்தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவு உற்றார்.