திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்திச்
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சில நாள்