திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பினொடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு பூகம் மிடை மழபாடி போற்றச் சென்றார்