திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘மைம் மரு பூங்குழல்’ என்று எடுத்து மாறு இல் பெருந்திருத்தோணி தன் மேல்
‘கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னில்
செம்மை தரும் விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல்’ என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்.