திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவு இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவியாரும்
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார்.