திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அணை உறும் அக் கிளைஞர் உடன் பெரும் பாணர் ஆளுடைய பிள்ளையார் தம்
துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத் தோணிபுரத் தோன்றலாரும்
இணை இல் பெருஞ் சிறப்பு அருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப்
பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார்.