திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார்.