திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான்; சூழ்ந்த
பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப,
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள் தனை நயந்த நம்பியோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்