திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை
சாலமிக்கு உயர் திருத் தொண்டின் உண்மைத் திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்கேளாடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார்.