திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழு மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்.